ஏ.எஸ்.எம். அர்ஹம் – நிருபர்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்முனை பகுதியின் சமகால அரசியல் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (19) கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பொருளாளருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் தலைமையில் அவரது கல்முனை காரியாலயத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ ரவூப் ஹக்கீம் கலந்துகொண்டார்.
நாட்டில் நிலவும் சமகால அரசியல் தொடர்பாகவும், எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும், எதிர்வரக்கூடிய தேர்தல்களில் எவ்வாறு போட்டியிடுவது குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
மேலும் கல்முனையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தற்போதைய மற்றும் எதிர்கால முன்னெடுப்புகள் குறித்தும் கருத்துரைக்கப்பட்டது.
நிகழ்வில் அதிதிகளாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றத் தவிசாளர்கள், உப தவிசாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்கள், போராளிகள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.





