கல்விக்கு உதவும் முன்னோடி – சட்டத்தரணி முஜீப் அமீன்..!
எஸ். சினீஸ் கான்
கல்வி என்பது ஒவ்வொரு சமூகத்தின் முன்னேற்றத்தின் அடித்தளமாக இருக்கிறது. அதனை அனைவருக்கும் சமமாகக் கொண்டு செல்லும் பணியில் ஈடுபடுவது, மனிதநேயத்தின் உயர்ந்த வடிவமாகக் கருதப்படுகிறது. இத்தகைய உயரிய நோக்கத்துடன் தன்னை அர்ப்பணித்துள்ளவரே சட்டத்தரணி முஜீப் அமீன் அவர்கள்.
பரக்கா சரட்டி (Barakah Charity) நிறுவனத்தின் தெற்காசிய பிராந்திய நிர்வாகியாக செயல்படும் இவர், கல்வித் துறையில் பல்வேறு முக்கியமான திட்டங்களை முன்னெடுத்து, ஆயிரக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறார். அவரது முயற்சிகள் எதிர்கால நலன்களை கருதி திட்டமிடப்பட்டவையாகவும், நன்கு பரிசீலிக்கப்பட்டவையாகவும் காணப்படுகின்றன.
அவரின் முயற்சில் இதுவரைக்கும், 200-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மாதம் ரூ.5,000 வீதம் கல்விப் புலமைப் பரிசில்கள், தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. இது ஏழை மற்றும் பின் தங்கிய குடும்ப மாணவர்களுக்கு ஒரு பெரும் ஊக்கமாக அமைந்துள்ளது.
அத்துடன், கல்விக்கான உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் நோக்கில், மூன்று பாடசாலைகளுக்கு நவீன கட்டிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் மற்ற மூன்று பாடசாலைகளுக்கான கட்டிடங்கள் விரைவில் திறக்கப்படவுள்ளன. இதன் பின்னணியில் இன்னும் சில பாடசாலைகளுக்கான கட்டுமான பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
IT வசதிகள் கொண்டு வரப்பட்டு, தகவல் தொழில்நுட்ப உலகிற்கு மாணவர்களை நன்கு அறிமுகப்படுத்தும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவை தவிர, மாணவர்கள் கல்வியை மகிழ்வுடன் தொடரும் வகையில், 10,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பாடசாலை பைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 4,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தைத்த சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தச் செயல்கள் கல்விக்கு உந்துகோலாகவும், சமூக சமத்துவத்திற்கான அடி இறையாகவும் விளங்குகின்றன.
அவர் அவரது சொந்த மாவட்டமான திருகோணமலை மாவட்டத்தை தாண்டி மட்டக்களப்பு, அம்பாரை மாவட்டங்களிலும் அவரது சமூகப்பணி தொடர்கிறது.
முஜீப் அமீன் அவர்களின் பணிகள் ஒரு தனிநபரின் முயற்சி என்பது மட்டும் அல்ல; அது ஒரு தலைமுறையின் எதிர்காலத்தையும், ஒரு சமூகத்தின் நம்பிக்கையையும் கட்டியெழுப்பும் திட்டம். கல்வி என்பது வெறும் புத்தகம் அல்ல; அது வாழ்வின் வழிகாட்டி என்பதை அவரின் பணிகள் வெளிப்படையாக காட்டுகின்றன.
சட்டத்தரணி முஜீப் அமீன் அவர்கள் மேற்கொண்டு வரும் கல்வி தொடர்பான சேவைகள், ஒரு சமூக சேவகரின் உண்மையான பண்பை எடுத்துக்காட்டுகின்றன. அவரைப் போன்று கல்விக்காக அர்ப்பணித்து செயல்படும் நபர்கள் தான் சமூகத்தின் உண்மையான தூண்கள். அவரது செயல்கள் தொடர்ந்து வளர்ந்து பல மாணவர்களின் கனவுகளை நனவாக்கும் என்பதில் ஐயமில்லை.
