Tuesday, November 4, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsகல்வியே நாட்டின் பண்பாட்டு மாற்றத்தின் அடித்தளம்!

கல்வியே நாட்டின் பண்பாட்டு மாற்றத்தின் அடித்தளம்!

கல்வியே நாட்டின் பண்பாட்டு மாற்றத்தின் அடித்தளம்– கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

கல்வி என்பது ஒரு நாட்டின் பண்பாட்டு பரிமாற்றத்தின் அடிப்படைத் தூணாகும் என்றும், கற்பித்தல் மற்றும் கற்றல் செயற்பாட்டை வலுப்படுத்தி நாட்டின் குழந்தைகளுக்கு உயர்தரமான கல்வியை வழங்குவது அனைவரின் கூட்டு பொறுப்பாகும் என்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் உள்ள டி.எஸ். சேனாநாயக்க கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டபோதே இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது, கல்வி மறுசீரமைப்புகள் தொடர்பாக கல்முனை, சம்மாந்துறை மற்றும் அம்பாறை கல்வி வட்டாரங்களில் உள்ள தரம் 1 மற்றும் தரம் 6 வகுப்பு ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள், அதிபர்கள் ஆகியோரை அவற்றைப் பற்றி விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகள் நடைபெற்றன.

கல்முனையில் உள்ள அல் அஸ்ராக் வித்தியாலயம் மற்றும் அம்பாறையில் உள்ள டி.எஸ். சேனாநாயக்க வித்தியாலயத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கல்வி சீர்திருத்தங்கள் குறித்து, கல்முனையின் சம்மாந்துறை மற்றும் அம்பாறை வலயங்களுக்குட்பட்ட பாடசாலைகளின் 01 மற்றும் 06 ஆம் வகுப்புகளின் ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் அதிபர்களுக்கு தெளிவுபடுத்தும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular

கல்வியே நாட்டின் பண்பாட்டு மாற்றத்தின் அடித்தளம்!

கல்வியே நாட்டின் பண்பாட்டு மாற்றத்தின் அடித்தளம்– கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

கல்வி என்பது ஒரு நாட்டின் பண்பாட்டு பரிமாற்றத்தின் அடிப்படைத் தூணாகும் என்றும், கற்பித்தல் மற்றும் கற்றல் செயற்பாட்டை வலுப்படுத்தி நாட்டின் குழந்தைகளுக்கு உயர்தரமான கல்வியை வழங்குவது அனைவரின் கூட்டு பொறுப்பாகும் என்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் உள்ள டி.எஸ். சேனாநாயக்க கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டபோதே இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது, கல்வி மறுசீரமைப்புகள் தொடர்பாக கல்முனை, சம்மாந்துறை மற்றும் அம்பாறை கல்வி வட்டாரங்களில் உள்ள தரம் 1 மற்றும் தரம் 6 வகுப்பு ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள், அதிபர்கள் ஆகியோரை அவற்றைப் பற்றி விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகள் நடைபெற்றன.

கல்முனையில் உள்ள அல் அஸ்ராக் வித்தியாலயம் மற்றும் அம்பாறையில் உள்ள டி.எஸ். சேனாநாயக்க வித்தியாலயத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கல்வி சீர்திருத்தங்கள் குறித்து, கல்முனையின் சம்மாந்துறை மற்றும் அம்பாறை வலயங்களுக்குட்பட்ட பாடசாலைகளின் 01 மற்றும் 06 ஆம் வகுப்புகளின் ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் அதிபர்களுக்கு தெளிவுபடுத்தும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular