வெறுமனே குறைகளை சொல்லி திரியாமல் இருக்கும் குறைகளை
நிறைகளாக்க களத்தில் இறங்கினார் புத்தளம் மாநகரசபை உறுப்பினர் எம்.எம்.எம் முர்ஷித்.
விடுமுறை நாளான நேற்று (06.10.2025) புத்தளம் மாநகர சபைக்குற்பட்ட ஐந்தாம் வட்டாரத்தில் உள்ள ஒரு பகுதி வடிகாண்கள் புத்தளம் மாநகரசபை உறுப்பினர் எம்.எம்.எம் முர்ஷித் அவர்களின் கள முயற்சியில் முழுமையாக துப்பரவு செய்யப்பட்டது.
மலை காலம் ஆரம்பித்துள்ளமையால் குப்பை கூளங்கள் தேங்கி இருக்கும் வடிகான்களை இணங்கண்டு தனது கரங்களால் துப்பரவு செய்த காட்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
வடிகான்களின் கழிவுப்பொருட்கள் மற்றும் ஏனைய குப்பை கூளங்கள் அதிகம் தேங்கி இருந்தமையாலும், அதன் கழிவுகள் பல நாட்கள் சுத்தம் செய்யப்படாமையாலும் நேரடியாக காலத்தில் குறித்து துப்பரவு பணிகளை மேற்கொண்டிருந்த ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் 5ம் வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற புத்தளம் மாநகரசபை உறுப்பினர் எம்.எம்.எம் முர்ஷித் அவர்களுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் களத்தில் நின்ற உறுப்பினருக்கு, அவருடைய ஆதரவாளர்களும் அப்பகுதி மக்களும் பூரண ஒத்துழைப்பை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
