Saturday, April 12, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsகளைகட்டிய வருடாந்த பங்குனி உத்தரப்பொங்கல்!

களைகட்டிய வருடாந்த பங்குனி உத்தரப்பொங்கல்!

வரலாற்று சிறப்பு மிகு கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய வருடார்ந்த பங்குனி உத்தரப்பொங்கல் நிகழ்வுகள் நேற்று சிறப்பாக ஆரம்பமானது.

பகல் இரவு பொங்கலாக இடம்பெறுகிற குறித்த பங்குனி உத்தரப்பொங்கல் நிகழ்வுகளில் பங்குகொள்ள வடமாகாணத்தின் பல பகுதிகளிலிருந்தும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெருமாளவான அடியவர்கள் தங்களுடைய நேர்த்திகளை காவடிகளாகவும், பாற்ச்செம்பாகவும், தூக்கு காவடி, பறவைக்காவடி, பொங்கலாகவும் நிறைவேற்றி வருகை தந்தனர்.

அடியவர்களின் நலன் கருதி போக்குவரத்து, பாதுகாப்பு, சுகாதார வசதிகள் அனைத்தும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் புத்தூர் சந்தியிலிருந்து புறப்பட்ட பண்டவண்டில்கள் நேற்று மாலை ஆலயத்தை வந்தடைந்தவுடன் பண்டகங்கள் எடுக்கப்பட்டு வளுந்து வைத்தலுடன் பாரம்பரிய பொங்கல் நிகழ்வும் ஆரம்பமானது.

கரைச்சி புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்திர பொங்கல் நிகழ்வில் கடந்த 04.04.2025 புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்தில் புத்தூர் சென்று அங்கிருந்து மாட்டு வண்டில்கள் மூலம் பண்டம் எடுத்து, பண்ட வண்டில்கள் 11.04.2025 நேற்றைய தினம் ஆலயத்தை வந்தடைந்தது.

இதனை பாரம்பரிய முறைப்படி பண்ட வண்டில்கள் அழைத்து வரப்பட்டு பூஜை நிகழ்வுகள் நடைபெற்றமை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தமை விஷேட அம்சமாகும்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular