ஜூட் சமந்த
மககும்புக்கடவல பகுதியில் துப்பாக்கிச் சூடு அல்லது வேறு ஏதேனும் காரணத்தினால் காலில் பலத்த காயமடைந்த நிலையில் யானைக்குட்டி ஒன்று சுற்றித்திரிவதாக அப்பகுதி கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். வன யானைக் கூட்டங்கள் பயணித்த இடங்களை அவதானித்தபோது இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த யானைக்குட்டியின் இடது காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக அந்த யானைக்குட்டி மிகுந்த சிரமத்துடன் நடந்து செல்வதாகவும் கிராம மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கடந்த சில வருடங்களாக மககும்புக்கடவல பகுதியில் சுமார் 200 யானைகள் கொண்ட கூட்டமொன்று வசித்து வருகின்றது. இந்த யானைகள் அடிக்கடி கிராமங்களுக்குள் புகுந்து விவசாய நிலங்களை அழிப்பது கடந்த காலங்களில் பலமுறை பதிவாகியுள்ளது.
விவசாய நிலங்களுக்குள் நுழையும் யானைகளைக் கட்டுப்படுத்தச் சிலர் மேற்கொள்ளும் பல்வேறு மனித நடவடிக்கைகளினால், இந்த யானைக்குட்டி காயமடைந்திருக்கலாம் என மக்கள் நம்புகின்றனர்.
காயமடைந்துள்ள இந்த யானைக்குட்டிக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அதன் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என கிராம மக்கள் எச்சரித்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு யானைக்குட்டியைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.


