கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கிராம சேவையாளர்கள் சுகயீன விடுமுறை போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்ட கரைச்சி பிரதேச செயலக பெண் கிராம உத்தியோகத்தரான நாகேந்திரம் கார்த்திகா என்பவருக்கு கடந்த 2025.03.08 உலக மகளிர் தினத்தன்று அவரது அலுவலக நேரத்தில் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கிராம உத்தியோகத்தர்களுக்கான பாதுகாப்பினை உறுதிப்படுத்தக் கோரி சுகயீன விடுமுறை போராட்டத்தினை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் நாட்டில் பாதுகாப்பு குறித்த பெரும் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், நாட்டின் பல பாகங்களிலும் அவ்வப்போது இவ்வாறான மிலேச்சனமான செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி செய்தியாளர் ஆனந்தன்