நிலைபேறான கூட்டுறவு மேம்பாடிற்கான புதிய வழியைத் தொடங்குதல் என்ற தொனிப்பொருளில் வடமாகாணத்தின் கூட்டுறவுத்துறையை மேம்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல், கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட ரீதியான கூட்டுறவு தலைவர்கள், முகாமையாளர்கள் மற்றும் கிராம மட்ட கூட்டுறவு அமைப்புகளுக்கு கூட்டுறவு செயல் திறன் தொடர்பாக அறிவுறுத்தும் வகையில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம், வடமாகாண மகளீர் விவகார அமைச்சின் செயலாளர் ,மாகாண கூட்டுறவு ஆணையாளர் ,ஐந்து மாவட்டங்களின் கூட்டுறவு உதவி ஆணையாளர்கள்,கூட்டுறவு துறைசார் சார் உத்தியோகத்தர்கள் கூட்டுறவு சங்கங்களின் தலைவர் ,கூட்டுறவுத்துறைசார்ந்தோர்,கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிகள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.
