Thursday, July 31, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsகிளிநொச்சியில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடல்!

கிளிநொச்சியில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடல்!

பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பாக கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும், அரச உத்தியோகத்தர்களுக்குமான கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபர் ஜே.ஏ.சந்திரசேன தலைமையில் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்கதிபர் (காணி) நளாயினி இன்பராஜ், மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசிர மெத்தர தந்திரி, உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் சமரக்கோன், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பாக கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள், சிறுவர் மற்றும் பெண்கள் தொடர்பாக மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

குறித்த கலந்துரையாடலில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பாக சமூகத்தில் எழுந்துள்ள சவால்கள் மற்றும் பாதுகாப்புக்கள் தொடர்பாக விரிவாக அறையப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular