வறண்ட மண்டல விவசாயம் குறித்த 11வது சர்வதேச மாநாடு (11வது ICDA-2025) யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக விவசாய பீட கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது. விவசாய பீட பீடாதிபதி பேராசிரியர் க.பகீரதன் தலைமையில் நடைபெற்ற குறித்த மாநாட்டில் பிரதம விருந்தினராக
யாழ் பல்கலைக்கழ துணைவேந்தர் பேராசிரியர் சிவகொழுந்து ஸ்ரீசற்குணராஜா பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
பிரதம பேச்சாளராக மஞ்சுளா குலரத்னா (லிங்கன் பல்கலைக்கழகம்-நியூசிலாந்து, யுகா சசாகி யமகட்டா பல்கலைக்கழகம்-யப்பான்) பங்குபற்றியதுடன், இலங்கை பேராதனை பல்கலைக்கழகத்தின் ஹிமால் ஏ. சுரவீர அவர்களும் கலந்து கொண்டார்.
குறித்த நிகழ்வில் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், விவசாயத்துறை சார்ந்த அதிகாரிகள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
