சமாதானத்திற்கான நடைப்பவனி ஒன்று இன்று கிளிநொச்சியில் இளைஞர்களால் மேற்கொள்ளப்பட்டது.
செல்வநாயகம் நினைவு அறைக்கட்டளையின் அனுசரணையுடன் வடமாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 30 இளைஞர்களுக்கு சமாதானம் தொடர்பாக பயிற்சியளிக்கப்பட்டு அவர்களால் உலக சமாதான தினத்தை முன்னிட்டு ஒரு நடைப்பவனி திட்டமிடப்பட்டது.
குறித்த நடைப்பயணம் உலக சமாதான தினத்தை முன்னிட்டு இன்றய தினம் காலை 9 மணியளவில் கிளிநொச்சி கரடிப்போக்கு சந்தியில் இருந்து அமைதியாக நடைப்பயணம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த நடைப்பயணம் ஆரம்பமாகி கிளிநொச்சி பேருந்து நிலையம் வரை தமிழ் சிங்கள முஸ்லிம் இளைஞர்களால் பல்வேறுபட்ட சமாதான எண்ணக்கரு தாங்கிய பதாகைகள் ஏந்தி குறித்த நடைப்பயணம் மேற்கொள்ளபட்டது.
இவ் நடைப்பயணத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மத குருமார்கள் சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
