கிளிநொச்சியில் ரயில் மோதி முதியவர் பரிதாபமாக உயிரிழப்பு
கிளிநொச்சி போலீஸ் பிரிவுக்குட்பட்ட உதய நகர் பகுதியில், ரயிலுடன் மோதி முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அனுராதபுரம் பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த யாழ் ரயிலுடன், துவிச்சக்கர வண்டியில் வீதியைக் கடக்க முற்பட்ட போதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் கிளிநொச்சி, ஆனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 82 வயதுடைய சபாபதி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
வயதான முதியவர் ஒருவர் துவிச்சக்கர வண்டியில் வீதியைக் கடக்க முயன்றபோது ஏற்பட்ட இந்தத் துயரச் சம்பவம் குறித்து, கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



