Saturday, July 26, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsகிளிநொச்சி கல்வி வளையத்தில் கடும் ஆசிரியர் பற்றாக்குறை!

கிளிநொச்சி கல்வி வளையத்தில் கடும் ஆசிரியர் பற்றாக்குறை!

ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கிளிநொச்சி விஜயம்!

ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இன்றைய தினம் 25.07.2025 கிளிநொச்சி தெற்கு வளைய கல்வி பணிமனைக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

கிளிநொச்சி வளைய கல்வி பணிமனை மற்றும் துணுக்காய் கல்வி வளையங்களில் பாரிய அளவிலான ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதாகவும், இதில் விசேடமாக விஞ்ஞானம், ஐ.சி.டி போன்ற பாடங்களுக்கு அதிகமாக பற்றாக்குறை நிலவுகின்றதாகவும் தெரிவித்தார்.

மேலும் சில பாடசாலைகள் நடத்த முடியாத அளவில் பாரிய ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதாகவும் அதிர்ச்சி தகவல் ஒன்றினை தெரிவித்தார்.

காளிசநொச்சி வளையத்தில் மாத்திரம் 75 பேர் இடமாற்றம் பெற்று சென்றுள்ள போதிலும், 35 புதிய ஆசிரியர்கள் மாத்திரமே திரும்பி வந்துள்ளனர் எனவும், இதேபோன்று முல்லத்தீவு, துணுகாய் கல்வி வளையங்களில் இதேபோன்ற நிலைமை காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

கல்வியை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான வளங்கள் பற்றாக்குறையாக காணப்படுவதாகவும், வடமாகாண ஆளுனறுக்கே இது தொடர்பான முழுமையான அதிகாரங்கள் இருப்பதாகவும், இதற்கான உரிய தீர்வினை அவர்களே எடுக்க வேண்டும் எனவும் இவ்விடயம் தொடர்பாக ஆராய்வதற்கே கிளிநொச்சி பகுதிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular