கிளிநொச்சியில் 68 வயதான வயோதிப பெண் இனந்தெரியாத நபர்களினால் இன்று மாலை கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட 1/2 ஏக்கர் திட்டம், ஊற்றுப்புலம் பகுதியில் தனிமையில் வசித்து வந்த விஜயரத்தினம் சரஸ்வதி என்ற 68 வயதுடைய பெண்னே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த பெண் வீட்டில் தனிமையில் இருந்தபோதே இன்று மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
