கிளிநொச்சி A9 வீதியில் கோர விபத்து – இருவர் பலி!

கசிப்புடன் மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இரண்டு நபர்கள் டிப்பர் வாகனத்துடன் மோதுண்டதில் ஒருவர் சம்பவ இடத்திலே உயிரிழந்ததுடன், மற்றும் ஒருவர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பொழுது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி பொலீஸ் பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதி 256 கிலோமீட்டர் பகுதிக்கு முன்பாக பரந்தன் அரச விதை உற்பத்திப் நிலையத்துக்கு முன்பாக இன்று 29.08.2025 அதிகாலை 5.30 மணியளவில் குறித்த பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது.

ஏ9 வீதி 256 கிலோமீட்டரில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில், யாழ்ப்பாணத்தில் இருந்து நுவரெலியா சென்ற அரச பேருந்து ஒன்று நிறுத்தப்பட்டபோது, பரந்தன் பகுதியில் இருந்து வேகமாக வந்த கனரக டிப்பர் வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து பேருந்து தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த அரச பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதுடன், அதே பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி  மோட்டார் சைக்கிலிள் கசிப்புடன் வருகை தந்த நபர்கள் விபத்து ஏற்பட்டிருந்த டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலே ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றும் ஒருவர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பொழுது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்துக்கு வருகைதந்த கிளிநொச்சி பொலிஸார் 1990 அவசர நோயாளர் கவுவண்டி அறிவித்து விபத்தில் காயப்பட்ட நபரை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

விபத்தில் காயப்பட்ட நபரை சுற்றி பலர் விடுப்பு பார்ப்பதும் படம் எடுக்கும் நபர்களாகவே காணப்பட்டதுடன், விபத்தில் காயமடைந்த நபரை  வைத்தியசாலைக்கு எடுத்து செல்ல எந்த நபரும் முன் வரவில்லை. காயம் அடைந்த நபரை நோயாளர் காவு வண்டிக்கு ஏற்றுவதற்கு விடுப்பு பார்க்கும் நபர்களிடம் பொலிஸார் உதவி கோரியும் எந்த நபரும் முன் வராமல் விடுப்பு பார்ப்பதிலும் படமெடுப்பதிலும் கவனம் செலுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.