Tuesday, September 23, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsகுடிவரவு, குடியகல்வு உயர் அதிகாரிக்கு 2 வருட கடூழிய சிறை!

குடிவரவு, குடியகல்வு உயர் அதிகாரிக்கு 2 வருட கடூழிய சிறை!

இலத்திரனியல் விசா (e-visa) நடைமுறையை இடைநிறுத்துமாறு நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை மீறிய குற்றத்திற்காக, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் முன்னாள் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டியவிற்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த ஆட்சிக் காலத்தில் இலத்திரனியல் விசா செயல்முறையை நிறுத்தி வைக்குமாறு உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் முன்னாள் கட்டுப்பாட்டாளர் நாயகமான ஹர்ஷ இலுக்பிட்டிய, நீதிமன்றத்தின் இந்த உத்தரவை வேண்டுமென்றே புறக்கணித்ததாக நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

யசந்த கோத்தாகொட, ஜனக் டி சில்வா, அர்ச்சுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய நீதிமன்ற நீதியரசர்கள் குழாத்தினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து, நீதிமன்றம் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular

குடிவரவு, குடியகல்வு உயர் அதிகாரிக்கு 2 வருட கடூழிய சிறை!

இலத்திரனியல் விசா (e-visa) நடைமுறையை இடைநிறுத்துமாறு நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை மீறிய குற்றத்திற்காக, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் முன்னாள் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டியவிற்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த ஆட்சிக் காலத்தில் இலத்திரனியல் விசா செயல்முறையை நிறுத்தி வைக்குமாறு உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் முன்னாள் கட்டுப்பாட்டாளர் நாயகமான ஹர்ஷ இலுக்பிட்டிய, நீதிமன்றத்தின் இந்த உத்தரவை வேண்டுமென்றே புறக்கணித்ததாக நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

யசந்த கோத்தாகொட, ஜனக் டி சில்வா, அர்ச்சுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய நீதிமன்ற நீதியரசர்கள் குழாத்தினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து, நீதிமன்றம் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular