விமானம் மூலம் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட ரூ.155,60,000 மதிப்புள்ள “குஷ்” போதைப்பொருள், கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே கொண்டு சென்ற வெளிநாட்டு பயணி ஒருவர் இன்று (24) காலை விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவால் கைது செய்யப்பட்டார்.
குறித்த நபர் 36 வயதான இந்திய பிரஜை எனவும், அவர் தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து இந்த “குஷ்” போதைப்பொருளை வாங்கி, இந்தியாவின் பெங்களூருக்கு கொண்டுவந்து, அங்கிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
அவர் தனது பொருட்களுடன் 03 பொதிகளில் பொதிசெய்யப்பட்ட 1.56 கிலோகிராம் எடையுடைய “குஷ்” போதைப்பொருளை மறைத்து கொண்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பயணியும் அவர் கொண்டு வந்த “குஷ்” போதைப்பொருள் கையிருப்பும் மேலதிக விசாரணைக்காக இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.