ஜூட் சமந்த
கைபேசி ஊடாக மிகவும் இரகசியமான முறையிலும் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவரை மாரவிலை பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை நேற்று 19 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது. மாரவிலை – குருச பள்ளிக்கு (Kurusa Palliya) அருகில் வசிக்கும் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து 450 கிராம் 450 மில்லிகிராம் ஹெரோயின், 5 கிராம் 200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், ஒரு மின்சார தராசு, இரண்டு பொதியிடும் இயந்திரங்கள், போதைப்பொருட்களை பொதியிடப் பயன்படுத்தப்படும் பெருமளவிலான உறைகள் மற்றும் 5 கைபேசிகள் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபர் அவ்வப்போது தனது கைபேசி இலக்கங்களை மாற்றிக்கொண்டு, நீண்டகாலமாக இந்த போதைப்பொருள் வியாபாரத்தை முன்னெடுத்து வந்துள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
மாரவிலை பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி சமத் தர்மப்பிரிய (Chamath Dharmapriya) தலைமையிலான அதிகாரிகளே இந்தச் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



