Wednesday, April 16, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsகைப்பற்றப்பட்ட பெருந்தொகை போதைப்பொருள்!

கைப்பற்றப்பட்ட பெருந்தொகை போதைப்பொருள்!

இலங்கை கடற்படையினருக்கு கிடைத்த நம்பகமான தகவல்களின் படி, மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, போதைப்பொருள் கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் உள்ளூருக்கு சொந்தமான நீண்ட நாள் மீன்பிடிக் கப்பல் மற்றும் ஆறு (06) சந்தேக நபர்கள் ஆழ்கடலில் வைத்து கடற்படையினரினால் கைதுசெய்யப்பட்டனர்.

நீண்ட நாள் மீன்பிடி கப்பல், திக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் நிபுணத்துவ அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட மேலதிக சோதனையின் போது மிக நுணுக்கமாக மறைத்து நாட்டிற்கு கொண்டு வர முயற்சித்த சுமார் 77 கிலோ 484 கிராம் ஹெரோயின் மற்றும் சுமார் 42 கிலோ 334 கிராம் ஐஸ் போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

கண்டுபிடிக்கப்பட்ட குறித்த போதைப்பொருட்கள், சந்தேக நபர்கள் மற்றும் நீண்ட நாள் மீன்பிடி படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

கடற்படைத் தளபதியினால் 2025 ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி திக்கோவிட்ட துறைமுகத்தில் போதைப்பொருட்கள் அவதானிக்கப்பட்டதுடன், இந்த நடவடிக்கையை வெற்றிகரமாக முடிப்பதற்கு பங்களித்த அனைத்து கடற்படை வீரர்கள் மற்றும் நடவடிக்கைக்கு பங்களித்த பிற தரப்பினரையும் கடற்படைத் தளபதி பாராட்டினார்.

மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்காகவும் தேவையான ஆதரவையும் நிவாரணத்தையும் வழங்க இலங்கை கடற்படையினர் தொடர்ந்து பணியாற்றி வருவதுடன், மீனவ சமூகத்திற்குள் ஒரு சிறிய குழுவினரால் மேற்கொள்ளப்படும் போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் தொடர்பாக கடற்படை சிறப்பு கவனம் செலுத்தி வருவதாகவும் கூறப்பட்டது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular