கொரிய மொழிப் பரீட்சை இடம் பெறுவதற்கு நியமிக்கப்பட்டிருந்த திகதியில் மேற்கொள்ளப்பட்ட மாற்றம் குறித்த அறிவித்தல்.
இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் காரணமாக, கொரிய மொழிப் பரீட்சை இடம் பெறுவதற்கு நியமிக்கப்பட்டிருந்த திகதியில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது,
அதற்கமைய, 2025 மே மாதம் 06ஆம் தககதி இடம்பெறவிருந்த பரீட்சை – 2025 மே மாதம் 10ஆம் திகதியும், 2005 மே மாதம் 07ஆம் திகதி இடம் பெறவிருந்த பரீட்சை 2025 மே மாதம் 17ஆம் திகதியும் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.
நான்கு அமர்வுகளின் கீழ் இடம்பெறவிருக்கும் இந்தக் கொரிய மொழிப் பரீட்சையானது, முதலாவது அமர்வு காலை 9 மணிக்கும், இரண்டாவது அமர்வு காலை 10.30 மணிக்கு, மூன்றாவது அமர்வு மதியம் 12.00 மணிக்கும், நான்காவது அமர்வு பிற்பகல் 2:00 மணிக்கு நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பணியகம் அறிவித்துள்ளது.
அத்துடன், பரீட்சை நடைபெறுவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்பு பரீட்சார்த்திகள் பரீட்சை நிலையத்திற்கு வருகை தரும்படியும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கேட்டுக் கொண்டுள்ளது.
