கொழும்பு மாவட்டத்தில் காணி மதிப்பீட்டு விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக இலங்கை மத்திய வங்கி தனது சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மத்திய வங்கி வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கொழும்பு மாவட்டத்திற்கான காணி மதிப்பீட்டுச் சுட்டெண் (Land Valuation Index), 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியுடன் ஒப்பிடுகையில் 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் 10.6 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இந்த வளர்ச்சியானது குடியிருப்பு, வர்த்தகம் மற்றும் கைத்தொழில் ஆகிய மூன்று முக்கிய பிரிவுகளிலும் பிரதிபலித்துள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது.
- குடியிருப்பு (Residential): ஆண்டு ரீதியாக 12.4 சதவீத அதிகரிப்பு.
- வர்த்தகம் (Commercial): 11.3 சதவீத அதிகரிப்பு.
- கைத்தொழில் (Industrial): 8.0 சதவீத அதிகரிப்பு.
கொழும்பு மாவட்டத்தின் காணி விலைகள் இந்த மூன்று துறைகளிலும் நிலையான மற்றும் தொடர்ச்சியான உயர்வைக் காட்டி வருவதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.


