இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் காலித் பின் ஹமூத் அல்-கஹ்தானி அவர்கள் முன்னிலையில், இலங்கைத் தலைநகர் கொழும்பில் ரமழான் இப்தார் விருந்து நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகாரங்கள், அழைப்பு மற்றும் வழிகாட்டல் அமைச்சின் சார்பில், இலங்கைக்கான சவூதி தூதரகத்தின் சமயப் பிரிவு இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தது.
இலங்கையில் ஹிஜ்ரி 1447-ஆம் ஆண்டிற்கான ‘இரு புனித ஹரம்களின் பாதுகாவலரின் இப்தார் திட்டத்தை’ (Custodian of the Two Holy Mosques’ Iftar Program) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் வகையில் இந்த விருந்து நடைபெற்றது.
இந்நிகழ்வில் சமய மற்றும் கலாசார விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் கௌரவ முனீர் முலஃபர், இஸ்லாமிய நிலையங்கள் மற்றும் சங்கங்களின் அதிகாரிகள் மற்றும் முக்கிய சமய மற்றும் ஊடகப் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.





