புதுப்பித்தல் பணிகள் காரணமாக, கொழும்பு மத்திய பேருந்து நிலைய வளாகம் நாளை மறுதினம் (11) முதல் மூடப்படும் என இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.
குறித்த பணிகள் முடியும் வரை கொழும்பு புறக்கோட்டை போதிராஜ மாவத்தை, குணசிங்கபுர மற்றும் பெஸ்டியன் மாவத்தை ஆகிய பகுதிகளில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.