தபால் திணைக்களத்தின் தபால் முத்திரை சேகரிப்பு பணியகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கொழும்பு தபால் முத்திரை கண்காட்சி 2025 நாளை மார்ச் 27 முதல் 29 வரை நடைபெறவுள்ளது.
காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை கொழும்பு 10 டி.ஆர். விஜேவர்தன மாவத்தை தபால் நிலைய தலைமையகத்தில் நடைபெற உள்ளது.
உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நாடுகளின் பழைய முத்திரைகள், முதல் நாள் அட்டைகள், நினைவுப் பொருட்கள், மற்றும் தபால் முத்திரை சேகரிப்பு பொழுதுபோக்கு தொடர்பான அம்சங்கள், பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகள் உட்பட பல பொருட்களை கொழும்பு முத்திரை கண்காட்சியில் பெற்றுக்கொள்ள முடியும்.
