ஜூட் சமந்த
2026 பெப்ரவரி 13 ஆம் திகதி தலங்கம பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த விசாரணைகளின் அடிப்படையில், குறித்த குற்றத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் சந்தே நபரின் அடையாளங்கள் மற்றும் விபரங்களை பொலிஸார் தற்போது வெளியிட்டுள்ளனர்.
சந்தேக நபரின் விபரங்கள்:
• உயரம்: சுமார் 5 அடி 5 அங்குலம்.
• வயது: சுமார் 44 வயது.
• தோற்ற அமைப்பு: கருப்பு நிறமானவர், கண்களைச் சுற்றி மஞ்சள் கலந்த நிறத்தைக் கொண்டவர்.
• விசேட அடையாளம்: சந்தேக நபரின் வலது கன்னத்திற்கு கீழே வெட்டுக்காயத் தழும்பு (Scar) ஒன்று காணப்படுகிறது.
சந்தேக நபரின் தற்போதைய தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையில், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட சில புகைப்படங்களை பொலிஸார் ஊடகங்களுக்கு வழங்கியுள்ளனர்.
இந்தச் சந்தேக நபர் தொடர்பான ஏதேனும் தகவல்கள் கிடைத்தால், உடனடியாகப் பின்வரும் தொலைபேசி எண்களுக்குத் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்:
• 071 – 8598008 • 071 – 8591641 • 071 – 8592279
இந்தத் தகவல்களைப் பொதுமக்களுக்குக் கொண்டு சேர்ப்பதன் மூலம் குற்றவாளிகளைக் கண்டறிய ஒத்துழைப்பு நல்குமாறு ஊடக நிறுவனங்களிடமும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


