Saturday, September 6, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsசர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் குறித்து புதிய தகவல்!

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் குறித்து புதிய தகவல்!

இறக்குமதி செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களுக்கும், குற்றவாளியான கெஹெல்பத்தர பத்மேவினால் கொண்டுவரப்பட்ட நிலையில் மித்தெனியவில் கண்டறியப்பட்ட ஐஸ் போதைப்பொருள் சம்பவத்துடன் தொடர்புடைய 2 கொள்கலன்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இன்று (06) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. உட்லர் இதனைக் குறிப்பிட்டார். 

போதைப்பொருள் சம்பவத்தில் கண்டறியப்பட்ட 2 கொள்கலன்களிலும் குறிப்பிடப்பட்டுள்ள எண்களுக்கும், துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களிலும் குறிப்பிடப்பட்டுள்ள எண்களுக்கும் எவ்வித ஒற்றுமையும் இல்லை என்று அவர் கூறியுள்ளார். 

2025 ஆம் ஆண்டில் 323 கொள்கலன்கள் துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்பட்டமை தொடர்பில் சமூகத்தில் சர்ச்சை ஏற்பட்டிருந்தது. ஆனால் இந்த இரண்டு கொள்கலன்களும் அதனுடன் தொடர்புடையவை அல்ல. ஏனென்றால் அந்த கொள்கலன்களின் எண்களை நாங்கள் ஆராய்ந்தோம். 

காரணம், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அந்த 323 கொள்கலன்கள் தொடர்பாக விசேட விசாரணை நடத்தி, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட எண்களுக்கு வெளியே வேறு இரண்டு கொள்கலன்களைக் கண்டறிந்தது. 

எனவே, இந்த இரண்டு கொள்கலன்களுக்கும் அந்த 323 கொள்கலன்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை உறுதியாக கூற முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் குறித்து புதிய தகவல்!

இறக்குமதி செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களுக்கும், குற்றவாளியான கெஹெல்பத்தர பத்மேவினால் கொண்டுவரப்பட்ட நிலையில் மித்தெனியவில் கண்டறியப்பட்ட ஐஸ் போதைப்பொருள் சம்பவத்துடன் தொடர்புடைய 2 கொள்கலன்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இன்று (06) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. உட்லர் இதனைக் குறிப்பிட்டார். 

போதைப்பொருள் சம்பவத்தில் கண்டறியப்பட்ட 2 கொள்கலன்களிலும் குறிப்பிடப்பட்டுள்ள எண்களுக்கும், துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களிலும் குறிப்பிடப்பட்டுள்ள எண்களுக்கும் எவ்வித ஒற்றுமையும் இல்லை என்று அவர் கூறியுள்ளார். 

2025 ஆம் ஆண்டில் 323 கொள்கலன்கள் துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்பட்டமை தொடர்பில் சமூகத்தில் சர்ச்சை ஏற்பட்டிருந்தது. ஆனால் இந்த இரண்டு கொள்கலன்களும் அதனுடன் தொடர்புடையவை அல்ல. ஏனென்றால் அந்த கொள்கலன்களின் எண்களை நாங்கள் ஆராய்ந்தோம். 

காரணம், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அந்த 323 கொள்கலன்கள் தொடர்பாக விசேட விசாரணை நடத்தி, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட எண்களுக்கு வெளியே வேறு இரண்டு கொள்கலன்களைக் கண்டறிந்தது. 

எனவே, இந்த இரண்டு கொள்கலன்களுக்கும் அந்த 323 கொள்கலன்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை உறுதியாக கூற முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular