ரியாத்தில் உள்ள ஹோட்டல் மீதான தாக்குதல் குறித்த தகவல்கள் தற்போது பெரும் சர்ச்சையையும், பரஸ்பர குற்றச்சாட்டுகளையும் ஏற்படுத்தியுள்ளன.
RIA Novosti செய்தி நிறுவனத்திடம் பேசிய ஈரானிய அதிகாரி ஒருவர், ரியாத் ஹோட்டல் மீதான தாக்குதல் அமெரிக்காவால் நடத்தப்பட்ட ஒரு “பொய் வழி நடவடிக்கை” (False Flag Operation) என்று கூறியுள்ளார்.
அரபு நாடுகளை ஈரானுக்கு எதிராகப் போரில் ஈடுபடத் தூண்டுவதற்காக அமெரிக்காவின் மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) இதைச் செய்ததாக அந்தத் தரப்பு குற்றம் சாட்டுகிறது. இருப்பினும் இந்தத் தாக்குதல் குறித்த செய்திகளை சவூதி அரேபிய அரசு முற்றிலுமாக மறுத்துள்ளது.
ரியாத்தில் உள்ள ஹயாட் ரீஜென்சி (Hyatt Regency) ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படும் செய்திகள் பொய்யானவை என சவூதி தகவல் தொழில்நுட்பக் குழு தெரிவித்துள்ளது. மேலும் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் ஹோட்டல் எரியும் காட்சிகள் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டவை என்றும், அவை உண்மைக்குப் புறம்பானவை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி 28, 2026 அன்று ரியாத் மற்றும் கிழக்கு மாகாணத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஈரானியத் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டதாக சவூதி உறுதிப்படுத்தியுள்ளதுடன், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைனில் சில இடங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு ஈரான் தான் காரணம் என அந்த நாடுகள் குற்றம் சாட்டுகின்றன.
ஈரானிய எல்லைக்குள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்தி வரும் “ஆபரேஷன் ரோரிங் லயன்” (Operation Roaring Lion) என்ற இராணுவ நடவடிக்கையின் ஒரு பகுதியாக இச்சம்பவங்கள் பார்க்கப்படுகின்றன.


