முன்னணி சோசலிசக் கட்சிக்கு அச்சமடைந்து தற்போதைய அரசாங்கம் படலந்த ஆணைக்குழு அறிக்கையை தாக்கல் செய்ததாக பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணியின் சில தரப்பினரின் எதிர்ப்பையும் மீறி இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் இன்று (15) நடைபெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.