பேடன் பவல் அவர்களின் 168 வது பிறந்த தினத்தை முன்னிட்டு இலங்கையில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைதிட்டம் நடைபெற்றது.
22.02.1857 ஆண்டு இங்கிலாந்தில் பிறந்த ராபர்ட் பேடன் பவல், பிரிடிஷ் நாட்டின் முன்னாள் இராணுவ வீரராக கடமையாற்றியதுடன், ஆண்கள் சாரணர் இயக்கத்தை உருவாக்கி தனது 83ஆவது வயதில் 1941ஆம் ஜனவரி மாதம் எட்டாம் திகதி இறந்தார்.
அவரின் 168 வது பிறந்த தினத்தை முன்னிட்டு கிளீன் ஸ்ரீலங்கா வேலைதிட்டமானது நாடளாவிய ரீதியில், புகையிரத நிலைய இலங்கை சாரணர் அணியினருடன் ஒன்றிணைந்து சிரமதான பணியினை மேற்கொண்டுள்ளனர்.
இன் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் மோகனபவன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

கிளிநொச்சி நிருபர் ஆனந்தன்