இலங்கை கடற்படையால், இலங்கையின் மேற்கே ஆழ்கடலில் நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, நச்சு போதைப்பொருட்களை கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் உள்ளூர் பல நாள் மீன்பிடிக் படகுடன் ஆறு (06) சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டனர்.
போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடிக் படகும் சந்தேக நபர்களும் இன்று நேற்று (2025 நவம்பர் 02) காலை திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் நடத்திய சிறப்பு பரிசோதனையின் போது, கடற்படையால் கைப்பற்றப்பட்ட பதினாறு (16) பொதிகளில் ஐஸ் போதைப்பொருள் சுமார் 250 கிலோகிராமை விட அதிகமான தொகை மற்றும் ஹெராயின் சுமார் 85 கிலோகிராமை விட அதிகமான தொகை இருந்தமை உறுதி செய்யப்பட்டதுடன் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட ஆகியோர் குறித்த போதைப்பொருட்களை ஆய்வு செய்வதில் பங்கேற்றனர்.
‘முழு நாடுமே ஒன்றாக’ என்ற தேசிய நடவடிக்கையின் கீழ் “போதையற்ற நாடு -ஆரோக்கியமான பிரஜைகள் வாழ்கை” என்ற அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் வகையில், இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல்படை, ஏனைய படையினர்,பொலிஸ், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் உள்ளிட்ட சட்ட அமலாக்க நிறுவனங்களுடன் இணைந்து முழு நாட்டையும் உள்ளடக்கி போதைப்பொருள் கைப்பற்றும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது.
அதன்படி, கடற்படைக்கு கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையில், இலங்கையின் மேற்கு கடலில் கடற்படை நீண்ட தூர செயல்பாட்டுக் கப்பலால் நடத்தப்பட்ட இந்த சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த உள்ளூர் பல நாள் மீன்பிடி படகு போதைப்பொருள் அடங்கிய பதினாறு (16) பொதிகளும் கடற்படையால் கைப்பற்றப்பட்டது.
மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பல நாள் மீன்பிடி படகு, ஐஸ் போதைப்பொருள் சுமார் 250 கிலோகிராமை விட அதிகமான தொகை மற்றும் ஹெராயின் சுமார் 85 கிலோகிராமை விட அதிகமான தொகை உள்ளிட்ட ஆறு (06) சந்தேக நபர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.




