நேற்று நுகேகொடையில் இடம்பெற்ற சில எதிர்க்கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்பு கூட்டம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.
தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்திலே இவ்வாறு பதிவொன்றை பதிவேற்றம் செய்துள்ளார்.
சில மாசங்களுக்கு முன் சொந்த ஊரிலேயே, 50-பேரை கூட, திரட்ட முடியாத நாமல் கட்சி, இன்று UNP, SLFP உடன் சேர்ந்து, தம் பலத்தை காட்டி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
என் வீட்டில் இருந்து நடை தூரம், நுகேகொடை சந்தி. நடக்காமல், நேரடி தகவல்.
கூட்ட ஏற்பாட்டாளர் பலமுறை நமது கட்சிக்கு அழைப்பு விடுத்தார்கள். நமக்கு “சரி வராது Bro” என மறுத்து விட்டோம்!
இந்த கூட்டத்தை வைச்சு, அங்க யாரும், அரசை உடனடியா கவிழ்க்க ஏலாது. அது கலர் கனவு!
மேடையிலும், அப்படி சொல்லப்படவில்லை. ஆனால், தான் கப்பல் கட்டுவது “ஹார்பரில்” தரித்து நிற்க அல்ல, ஆழ்கடலில் ஓடத்தான் என நாமல் சொன்னார்.
இது, அரசுக்கு சவால் விடும் கூட்டம் என்பதை விட, தேசத்தின் பிரதான எதிர் கட்சி யார் என நிலைநாட்டுவதே அங்கே முதல் கனவு!
இதன் மூலம் இங்கே கூடிய சிங்கள (பெளத்த) மகாஜனம், சில செய்திகளை தந்தது.
(1) 2019ல் கோதாவுக்கும், பின் 2024ல் அனுரவுக்கும் வாக்களித்த, அதே 69 இலட்சம், விரும்புனா, தாய் வீடு திரும்பலாம். எந்நேரமும் மாறலாம். மாறாமலும் விடலாம். எப்படியும், இங்கே நாம் தான் எஜமானர். எங்கள் “தேசாபிமானம்” தான் இங்கே “பிரைம் சப்ஜெக்ட்”!
(2) சிறுபான்மை சில்லறைகள் மூடி-கொண்டு வேடிக்கை பார்க்கனும்! அல்லது ஓரமா போய் விளையாடனும்!
(3) பாராளுமன்ற, எதிர்கட்சி தலைவரான சஜித், இப்படி ஒரு கூட்டத்தை, வெளியே கூட்டி காட்டும்வரை, நாட்டிலே நாமல் தான் “ஒபொசிசன் லீடர்”! என தனது பதிவில் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.




