சிறுவர் தினத்தையொட்டி போரின் போது படுகொலை செய்யப்பட்ட மாணவர்கள் நினைவாக “எழுகை” அமையத்தின் ஒழுங்குபடுத்தலில் மாபெரும் குருதிக்கொடை முகாம் கிளிநொச்சி பசுமை பூங்காவனத்தில் நடைபெற்றது.
இதன்போது பலர் தாமாகவே முன்வந்து மிகுந்த ஆர்வத்துடன் குருதி கொடையினை இன்றைய தினம் 27.09.2025 வழங்கினர்.
“சிந்திய குருதியை ஒருபோதும் மறக்கிலோம் அன்று சிந்தியதை இன்றும் கொடை செய்கிறோம்” என்ற அடிப்படையில் இன்றைய இரத்ததான முகம் இடம்பெற்றமை விஷேட அம்சமாகும்.


