Tuesday, July 7, 2026
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsசிறைச்சாலை அமைச்சர் உடனே விலக வேண்டும் - ஜி.எல்.பீரிஸ் எச்சரிக்கை!

சிறைச்சாலை அமைச்சர் உடனே விலக வேண்டும் – ஜி.எல்.பீரிஸ் எச்சரிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவமானது, இலங்கைச் சட்டம் மற்றும் சர்வதேச சட்டங்களின் கீழ் மிகக் கடுமையான கொடூரக் குற்றமாகும் என்று கூட்டு எதிர்க்கட்சியின் அழைப்பாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இன்று (07) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அதிரடித் தகவல்களை வெளியிட்டுள்ளார். இந்த கொடூர சம்பவத்திற்கு முழுப்பொறுப்பேற்று சிறைச்சாலைகள் அமைச்சர் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர் பகிரங்கமாக வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பு, மலர் வீதியில் அமைந்துள்ள அரசியல் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த அவசர ஊடகவியலாளர் சந்திப்பில், சிறைக்குள் நடந்த கோரத் தாண்டவத்தின் உண்மை நிலவரங்களை அவர் சல்லி சல்லியாக உடைத்து நாடாளுமன்றத்திற்கும் நாட்டு மக்களுக்கும் அம்பலப்படுத்தினார்.

பேராசிரியர் பீரிஸ் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ தரவுகளின்படி, நேற்று இரவு நிலவரப்படி இந்த மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்வடைந்துள்ளது. இதில் ஆகக் கொடூரமான விடயம் என்னவென்றால், உயிரிழந்த 26 பேரில் 7 பேர் அரசாங்க அதிகாரிகள், அதாவது சிறைச்சாலை அத்தியட்சகர் மற்றும் கண்காணிப்பு அதிகாரிகள் ஆவர். சிறைக்காவலர்களின் பாதுகாப்பே கேள்விக்குறியாகியுள்ள இந்தத் தளம், தற்போதைய பாதுகாப்புப் பொறிமுறையின் உச்சக்கட்டத் தோல்வியையே காட்டுகிறது.

இதனை வெறுமனே ஒரு உள்நாட்டுச் சிறை மோதலாகக் கடந்து சென்றுவிட முடியாது என்று எச்சரிக்கும் பேராசிரியர், இலங்கை அரசியலமைப்பின் 11ஆவது (சித்திரவதைக்கு எதிரான உரிமை) உறுப்புரை அப்பட்டமாக மீறப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார். அதுமட்டுமன்றி, இலங்கை கைச்சாத்திட்டுள்ள நான்கு முக்கிய சர்வதேச உடன்படிக்கைகளை இந்தச் சம்பவம் முற்றாகத் தவிடுபொடியாக்கியுள்ளது.

சர்வதேச மனித உரிமைத் தளத்தில் இலங்கை கைச்சாத்திட்டுள்ள ‘நெல்சன் மண்டேலா விதிகள்’ (Nelson Mandela Rules) எனப்படும் கைதிகளை நடத்தும் குறைந்தபட்ச சர்வதேச தரநிலை, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பில் சர்வதேச உடன்படிக்கை (ICCPR), சித்திரவதைகளுக்கு எதிரான உடன்படிக்கை மற்றும் உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனம் ஆகிய அனைத்தையும் இந்த அரசாங்கம் அப்பட்டமாக மீறியுள்ளது. கைதிகளினதும், அதிகாரிகளினதும் உயிர்களுக்குப் பாதுகாப்பு வழங்க முடியாத இந்த அரசாங்கத்தின் பின்னணி குறித்தும், சர்வதேச அளவில் இலங்கை எதிர்கொள்ளப்போகும் சட்டச் சிக்கல்கள் குறித்தும் விரிவான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular

சிறைச்சாலை அமைச்சர் உடனே விலக வேண்டும் – ஜி.எல்.பீரிஸ் எச்சரிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவமானது, இலங்கைச் சட்டம் மற்றும் சர்வதேச சட்டங்களின் கீழ் மிகக் கடுமையான கொடூரக் குற்றமாகும் என்று கூட்டு எதிர்க்கட்சியின் அழைப்பாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இன்று (07) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அதிரடித் தகவல்களை வெளியிட்டுள்ளார். இந்த கொடூர சம்பவத்திற்கு முழுப்பொறுப்பேற்று சிறைச்சாலைகள் அமைச்சர் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர் பகிரங்கமாக வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பு, மலர் வீதியில் அமைந்துள்ள அரசியல் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த அவசர ஊடகவியலாளர் சந்திப்பில், சிறைக்குள் நடந்த கோரத் தாண்டவத்தின் உண்மை நிலவரங்களை அவர் சல்லி சல்லியாக உடைத்து நாடாளுமன்றத்திற்கும் நாட்டு மக்களுக்கும் அம்பலப்படுத்தினார்.

பேராசிரியர் பீரிஸ் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ தரவுகளின்படி, நேற்று இரவு நிலவரப்படி இந்த மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்வடைந்துள்ளது. இதில் ஆகக் கொடூரமான விடயம் என்னவென்றால், உயிரிழந்த 26 பேரில் 7 பேர் அரசாங்க அதிகாரிகள், அதாவது சிறைச்சாலை அத்தியட்சகர் மற்றும் கண்காணிப்பு அதிகாரிகள் ஆவர். சிறைக்காவலர்களின் பாதுகாப்பே கேள்விக்குறியாகியுள்ள இந்தத் தளம், தற்போதைய பாதுகாப்புப் பொறிமுறையின் உச்சக்கட்டத் தோல்வியையே காட்டுகிறது.

இதனை வெறுமனே ஒரு உள்நாட்டுச் சிறை மோதலாகக் கடந்து சென்றுவிட முடியாது என்று எச்சரிக்கும் பேராசிரியர், இலங்கை அரசியலமைப்பின் 11ஆவது (சித்திரவதைக்கு எதிரான உரிமை) உறுப்புரை அப்பட்டமாக மீறப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார். அதுமட்டுமன்றி, இலங்கை கைச்சாத்திட்டுள்ள நான்கு முக்கிய சர்வதேச உடன்படிக்கைகளை இந்தச் சம்பவம் முற்றாகத் தவிடுபொடியாக்கியுள்ளது.

சர்வதேச மனித உரிமைத் தளத்தில் இலங்கை கைச்சாத்திட்டுள்ள ‘நெல்சன் மண்டேலா விதிகள்’ (Nelson Mandela Rules) எனப்படும் கைதிகளை நடத்தும் குறைந்தபட்ச சர்வதேச தரநிலை, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பில் சர்வதேச உடன்படிக்கை (ICCPR), சித்திரவதைகளுக்கு எதிரான உடன்படிக்கை மற்றும் உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனம் ஆகிய அனைத்தையும் இந்த அரசாங்கம் அப்பட்டமாக மீறியுள்ளது. கைதிகளினதும், அதிகாரிகளினதும் உயிர்களுக்குப் பாதுகாப்பு வழங்க முடியாத இந்த அரசாங்கத்தின் பின்னணி குறித்தும், சர்வதேச அளவில் இலங்கை எதிர்கொள்ளப்போகும் சட்டச் சிக்கல்கள் குறித்தும் விரிவான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular