ஜூட் சமந்த
சிலாபம் நகரில் சுமார் 150 ஆண்டுகள் பழமையான ஒரு பெரிய மாரா மரத்தை வெட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
சிலாபம் மக்கள் வங்கியின் முன் அமைந்திருந்த இந்த பெரிய மாரா மரத்தின் அழுகிய சில கிளைகள் சமீபத்தில் விழத் தொடங்கியதை அடுத்து சில கிளைகளும் அப்போது வெட்டப்பட்டன.
இருப்பினும், அந்த மரம் காலாவதியாகி ஆபத்தானதாக மாறியதாலும், மழை காலத்தில் இம் மரம் ஆபத்தாக பார்க்கப்படுவதாலும் வெட்டப்பட்டதாக நகரவாசிகள் கூறுகின்றனர்.
பட்டைகளை அகற்றிய மாரா மரம் சிலாபம் நகரத்தின் மிகப் பழமையான மரம் என்றும் நகரவாசிகள் கூறுகின்றனர்.



