நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 16 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மைத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் 106 பிரதேச செயலகங்களுக்குற்பட்ட 4,959 குடும்பங்களைச் சேர்ந்த 20,247 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறித்த நிலையம் தெரிவித்துள்ளது.
மேலம் நிலவும் சீரற்ற காலநிலையால் இதுவரை நான்கு ஓர் உயிரிழந்துள்ளதாகவும், ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மைத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை சீரற்ற காலநிலையால் 2 வீடுகள் முற்றாக பாதிக்கப்பட்டுளளதுடன், 507 வீடுகள் பகுதியளவில் பதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 8 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 30 பேர் பாதுகாப்பான இடத்தில் தங்கிச வைக்கப்பட்டுள்ளதாகவும், அயல் வீடுகளில் சுமார் 43 குடும்பங்களைச் சேர்ந்த 180 பேர் தங்கியுள்ளதாகவும் குறித்த நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


