- ஏர்பஸ் ஊழல் வழக்கில் திடீர் திருப்பம்: நாமல் ராஜபக்ஷ விளக்கமறியலில்!
- நீதிமன்றம் அதிரடி உத்தரவு: செப்டம்பர் 18 வரை சிறையில் நாமல்!
- 100 கோடி ரூபா இலஞ்ச விவகாரம்: நாமலுக்கு ஆப்பு வைத்த கொழும்பு பிரதான நீதவான்!
இலங்கை அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள ஏர்பஸ் விமானக் கொள்வனவு மெகா ஊழல் விவகாரத்தில், கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் செப்டம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேசிய விமானச் சேவையான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு வானூர்திகளைக் கொள்வனவு செய்வதற்கான பாரிய கொடுக்கல் வாங்கலின் போது, சுமார் 100 கோடி ரூபா இலஞ்சமாகப் பெறப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலேயே இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகளினால் அவர் இன்று அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷ, ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதவான், அவரை உடனடியாக செப்டம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். இந்த அதிரடித் தீர்ப்பு நாட்டின் அரசியல் வட்டாரங்களில் தற்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றது.


