Friday, June 6, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsசெம்மணி மனித புதைகுழி குறித்து கவலை!

செம்மணி மனித புதைகுழி குறித்து கவலை!

செம்மணி மனித புதைகுழி அகழ்வுகள் சர்வதேச கண்காணிப்புடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என வட கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத் தலைவி யோகராசா கலாறஞ்சினி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினுடைய அலுவலகத்தில் நேற்று (04-06-2025) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

காலத்துக்கு காலம் பல்வேறு மனித புதை குழிகள் கண்டு கண்டுபிடிக்கப்பட்டு அகழ் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அவ்வாறே செம்மனி புதை குழியிலும் மனித எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டிருக்கின்றன என்று குறிப்பிட்டார்.

எனவே இவ்வாறான அகழ்வு பணிகள் ஒரு சர்வதேச கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், அத்துடன் ஊடகவியலாளர்கள் கானாமலாக்கப்பட்டவர்கள் சார்பிலும் அவர்களது பிரதிநிதிகளையும் அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், குறித்த அகழ்வு பணிக்கு நீதி கோரிஇன்றைய தினம் செம்மணி சந்தியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றையும் முன்னெடுக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular