பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த அனைவரும் 40 வயதுக்குட்பட்டவர்கள்.
அதில் 13 வயது சிறுவனும் அடங்குவார்.
இறந்தவர்களில் மூன்று இளைஞர்கள் மற்றும் 20-30 வயதுக்குட்பட்ட ஆறு பேரும் அடங்குவர்.
அவர்களில் பெரும்பாலோர் தங்கள் நண்பர்களுடன் வந்து 18 வருட காத்திருப்புக்குப் பின்னர், ஐ.பி.எல். கிண்ணத்தை வென்ற தங்கள் அணியான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை உற்சாகப்படுத்தியவர்கள் ஆவர்.
இவர்களில் பலர் பெங்களூருவைச் சேர்ந்தவர்கள்.
ஆனால் சிலர் மற்ற மாவட்டங்களிலிருந்தும் பயணம் செய்தனர்.
ஒரு பெரிய கொண்டாட்டமாகத் தொடங்கிய இந்த நிகழ்வு மிகப்பெரிய கூட்ட நெரிசல் பாதுகாப்பு ஏற்பாடுகளை மீறி சோகத்தில் முடிந்தது.
அனர்த்தத்தில் 11 பேர் உயிரிழந்தனர் மற்றும் 47 பேர் காயமடைந்தனர்.
உயிரிழந்தவர்கள் ஏ.எஸ்.திவ்யன்ஷி (13), டோரேஷா (32), பூமிக் (20), சஹானா (25), அக்ஷதா (27), மனோஜ் (33), ஷ்ரவன் (20), தேவி (29), சிவலிங்கா (17), சின்மயி (19), பிரஜ்வல் (20) ஆகியோர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவசர ஏற்பாடுகள், போதுமான திட்டமிடல் இல்லாமை மற்றும் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததே இந்த துயர சம்பவத்திற்குக் காரணம்.
பெங்களூரு விதானசௌதாவின் முன்பகுதியில் மாநில அரசு ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழாவில், ஆளுநர், முதலமைச்சர் சித்தராமையை, துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு விராட் கோலி மற்றும் அணி வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
ரசிகர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால், விதான சௌதாவில் இருந்து சின்னசாமி மைதானம் வரை நடைபெறவிருந்த பேரணி ரத்து செய்யப்பட்டது.
இதனிடையே, 35,000 இருக்கைகள் மட்டுமே கொண்ட சின்னசாமி மைதானத்துக்கு வெளியே மூன்று இலட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் கூடியதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
போதுமான ஏற்பாடுகள் இல்லாததால் விமர்சனங்கள் எழுந்த நிலையில், முதலமைச்சர் சித்தராமையா ஒரு செய்தியாளர் சந்திப்பில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவதாகவும் உறுதியளித்தார்.
