Tuesday, February 17, 2026
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு: கடமை தவறிய காவல்துறையினர் கைது!

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு: கடமை தவறிய காவல்துறையினர் கைது!

ஜிந்துபிட்டி பகுதியில் கடந்த சனிக்கிழமை (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் நடைபெற்ற தருணத்தில் தமது கடமையைச் சரிவரச் செய்யத் தவறியமை மற்றும் அலட்சியமாகச் செயற்பட்டமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

ஜிந்துப்பிட்டி பகுதி சலூனில் மன்னார் சிலாவத்துறையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த பெப்ரவரி 14 இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முடிவெட்டுவதற்காக சலூனுக்குச் சென்றிருந்த போதே, மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களால் T-56 ரக துப்பாக்கியால் இந்தச் சூடு நடத்தப்பட்டுள்ளது

மேலும் சிலாவத்துறையை சேர்ந்த ஒருவரும் கிராண்ட்பாஸ், கொட்டாஞ்சேனை பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் இருவரும் இந்த சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு: கடமை தவறிய காவல்துறையினர் கைது!

ஜிந்துபிட்டி பகுதியில் கடந்த சனிக்கிழமை (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் நடைபெற்ற தருணத்தில் தமது கடமையைச் சரிவரச் செய்யத் தவறியமை மற்றும் அலட்சியமாகச் செயற்பட்டமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

ஜிந்துப்பிட்டி பகுதி சலூனில் மன்னார் சிலாவத்துறையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த பெப்ரவரி 14 இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முடிவெட்டுவதற்காக சலூனுக்குச் சென்றிருந்த போதே, மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களால் T-56 ரக துப்பாக்கியால் இந்தச் சூடு நடத்தப்பட்டுள்ளது

மேலும் சிலாவத்துறையை சேர்ந்த ஒருவரும் கிராண்ட்பாஸ், கொட்டாஞ்சேனை பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் இருவரும் இந்த சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular