அதிபராக பொறுப்பேற்ற டிரம்புக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம் வலுத்து வருகிறது.
அதிபர் டிரம்ப் இறக்குமதி ஏற்றுமதி வரி ஏற்றம், வெளிநாட்டவர்களை வெளியேற்றுதல், வரி உயர்வு, பல நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட நிதி நிறுத்தம், காசா, உக்ரைன்போரில் அமெரிக்க நிலை, அரசு ஊழியர்கள் பணி நீக்கம் என கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார் டிரம்ப்.
அதிபர் டிரம்ப் பதவி ஏற்றது முதல் அரசு ஊழியர்கள் சுமார் 2,00,000 பேர் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இது போன்ற முடிவுகளுக்கு அமெரிக்க மக்கள் பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர். சர்வாதிகாரத்திற்கு எதிராக ஜனநாயகத்தை பாதுகாக்க போராட்டத்தை துவக்கி உள்ளதாகவும், மீண்டும் ஒரு சுதந்திர புரட்சியை உருவாக்குவோம் என்கின்றனர் போராட்டக்காரர்கள்.
நேற்று சனிக்கிழமை முதல் துவங்கிய போராட்டம் 50 மாகாணங்களில் 400 க்கும் மேற்பட்ட பேரணிகள் நடத்த திட்டமிட்டுள்ளனர். பலரும் டிரம்ப்பிற்கு எதிராக பதாகைகள் ஏந்து போராரடி வருகின்றனர். டவுண்டவுன், சான்பிரான்சிஸ்கோ, ஒரு கோடிக்கும் மேல் போராட்டக்காரர்கள் திரள இருப்பதாக ஒருங்கிணைப்பு கமிட்டியினர் தெரிவிக்கின்றனர். இன்னும் பலகட்ட போராட்டங்கள் நடக்கும் என்பதால் டிரம்ப் நிர்வாகம் அதிர்ந்து போய் உள்ளது.
வாஷிங்டன் டிசியில் உள்ள துணை அதிபர் மாளிகையை முற்றுகையிடும் பேரணி துவங்கி உள்ளாதாகவும் ஒரு தகவல் தெரிவிக்கிறது.
