Wednesday, July 9, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeWorld Newsடெக்ஸாஸ் வெள்ளத்தில் இதுவரை 104 பேர் பலி!

டெக்ஸாஸ் வெள்ளத்தில் இதுவரை 104 பேர் பலி!

அமெரிக்கா டெக்ஸாசில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில், இதுவரை 104 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மாயமாகி உள்ளனர்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள கெர்கவுண்டியில் பெய்த கனமழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் குவாடலுாப் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. இன்னமும் பலரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

கனமழை காரணமாக, இதுவரை 104 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் அதிகளவில் சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கெர் கவுன்டியின் சராசரி ஆண்டு மழைப்பொழிவில் மூன்றில் ஒரு பங்கு மழை அதாவது, 30 செ.மீ., மழை ஒரே இரவில் பெய்துள்ளதே நிலைமை மோசமாக காரணம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

உயிரிழப்பு எதிரொலியாக இதை பேரிடராக அந்நாட்டு அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது தொடர்பான கோப்பில் அவர் கையெழுத்திட்டுள்ளார். குவாடலுாப் நதியில் 45 நிமிடங்களில் 26 அடி அளவுக்கு நீர்மட்டம் உயர்ந்து, கரையில் இருந்த குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் நிலைமை மோசமானது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular