இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் 23,404 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
காய்ச்சல் குறையாமல் நீடிக்குமாயின் நோயாளர்கள் வைத்திய சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் பிரஷிலா சமரவீர தெரிவித்தார்.
அரச நிறுவனங்கள், பாடசாலைகள், கட்டடங்கள் நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்படும் இடங்கள் மற்றும் மதஸ்தலங்களில் டெங்கு நுளம்புகள் அதிகளவில் பரவும் நிலை காணப்படுவதாக சுகாதாரப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
புறக்கோட்டையில் உள்ள மிதக்கும் சந்தை, டெங்கு நுளம்புகள் பாரியளவில் பரவக்கூடிய இடமாக மாறியுள்ளது என கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.
தொடர்ந்து பெய்து வரும் மழையால், டெங்கு மற்றும் சிகுன்குனியா நோய்கள் விரைவாகப் பரவி வருகின்றன.
சுற்றுப்புறச் சூழலை டெங்கு நுளம்புகள் பரவாமல் தூய்மையாக வைத்திருக்குமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.