கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கான தபால் மூல வாக்குச்சீட்டுக்கள் அஞ்சல் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டது.
பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கான அஞ்சல் மூல வாக்கு சீட்டுக்கள் அஞ்சல் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேச சபை சட்ட சிக்கல் நிலவுகின்ற நிலையில் பூநகரி பிரதேச சபைக்கான அஞ்சல் மூல வாக்கு சீட்டுக்கள் அஞ்சல் திணைக்களத்திடம் ஏற்கனவே கையளிக்கப்பட்டது.
இன்று பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கான தபால் மூல வாக்குச்சீட்டுக்கள் அஞ்சல் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டது. பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்காக 370 பேர் அஞ்சல் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
இதேவேளை பூநகரி பிரதேச சபையில் அஞ்சல் மூலம் வாக்களிக்க 531பேர் தகுதிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
