புத்தளம் மாவட்டத்தில், உள்ளூராட்சித் தேர்தலில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் புத்தளம் மாநகர சபை, புத்தளம் பிரதேச சபை, வண்ணாத்திவில்லு பிரதேச சபை, கற்பிட்டி பிரதேச சபை ஆகியவற்றில் மரச் சின்னத்தில் ஆசனங்களை வெற்றி பெற்றுள்ளதோடு, நாத்தாண்டிய பிரதேச சபையில் ஐக்கிய தேசியக் கூட்டமைப்பின் தராசு சின்னத்திலும் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் பிரஸ்தாப உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைவது தொடர்பான கலந்துரையாடல் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் “தாருஸ்ஸலாம்” தலைமையகத்தில் நேற்று (23) நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் கட்சியின் உயர்பீட உறுப்பினர்களான எஸ்.எச்.எம்.நியாஸ், ரணீஸ் பதுறுதீன் (புத்தளம் மாநகர சபை உறுப்பினர்), எம்.எச்.எம்.ஹில்மி, கே.எல்.எம்.ரிழ்வான், ஏ.எஸ்.எம் .ரிழ்வான் மற்றும் முக்கியஸ்தர்கள் பங்கு பற்றி கருத்துக்களைத் தெரிவித்தனர்.
