ஈரானின் மத்திய நகரமான இஸ்ஃபஹானில், இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்புக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் மஜித் மொசய்யேபி என்ற நபர் ஞாயிற்றுக்கிழமை தூக்கிலிடப்பட்டார்.
இஸ்லாமிய புரட்சி நீதிமன்றம், மஜித் மொசய்யேபியை “கடவுளுக்கு எதிராக போர் தொடுத்தல்” (முஹாரேபா) மற்றும் எதிரிகளுடன் ஒத்துழைத்து உளவு பார்த்ததற்காக “பூமியில் ஊழல்” செய்த குற்றங்களுக்காக தண்டித்தது.
பாரசீக வளைகுடா நாடு ஒன்றில் டேவிட் என்ற பெயரில் அறியப்பட்ட மொசாட் முகவருடன் தொடர்பில் இருந்த இவர், வாரந்தோறும் அறிக்கைகளை அளித்து வந்தார்.
ஈரானின் முக்கியமான இடங்கள் மற்றும் குறிப்பிட்ட நபர்கள் பற்றிய ரகசிய தகவல்களை கிரிப்டோகரன்சி பணம் பெறுவதற்கு ஈடாக மொசாட்டுக்கு வழங்கும் பணியை மொசய்யேபி மேற்கொண்டார்.
கடந்த ஜூன் 13 அன்று இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் போர் தொடங்கிய பின்னர், எதிரிகளுக்கு சேவை செய்ததாக ஈரான் பாதுகாப்பு படைகள் ஏராளமானவர்களை கைது செய்தனர்.
ஈரானின் நீதித்துறை தலைவர் கோலாம் ஹொசைன் மொஹ்சேனி எஜெய், உளவு வழக்குகளை உடனடியாக விசாரித்து, நீண்ட நிர்வாக தாமதங்களை தவிர்க்குமாறு நீதிமன்றங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.