Thursday, July 3, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsதூண்டில் மீன் பிடிக்க சென்றவர் உயிரிழப்பு!

தூண்டில் மீன் பிடிக்க சென்றவர் உயிரிழப்பு!

கிளிநொச்சி மாவட்ட இரணைமடு குளத்தில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

கிளிநொச்சி, இரணைமடு குளத்தில் தூண்டில் மீன் பிடிப்பதற்காகச் சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தையான வேலாயுதம் ஜெயரூபன் உயிரிழந்த நிலையில் சடலமாக இன்று (03) மீட்கப்பட்டுள்ளார்.

தூண்டில் மீன் பிடிக்க சென்ற குடும்பஸ்தர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் குறித்த குடும்பஸ்தர் கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியை சேர்ந்தவர் எனவும், சடலம் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரணம் குறித்த மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular