தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 8 மதகுகளும் 15 அடி உயரத்திற்கும் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் துறை அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று 27 ஆம் தேதி மதியம் 01.00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையில், திறக்கப்பட்ட மதகுகளிலிருந்து வினாடிக்கு 83,000 கன அடி நீர் தெதுரு ஓயாவில் வெளியேற்றப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ராஜாங்கனை நீர்த்தேக்கம் மற்றும் அங்கமுவ நீர்த்தேக்கங்களின் திறக்கப்பட்ட மதகுகளிலிருந்து அதிகளவான நீர் கலா ஓயாவில் வெளியேற்றப்படும் என்று நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது.
நிலவும் சூழ்நிலை காரணமாக தெதுரு ஓயா மற்றும் கலா ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால், அருகிலுள்ள குடியிருப்பாளர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு புத்தளம் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது.


