காட்டு யானைகள் சில மக்களுக்கு பயன்தரும் பல தென்னை மரங்களை நேற்றிரவு நாசம் செய்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட மணியங்குளம் கிராமத்திற்கு இரவு வேளைகளில் காட்டு யானைகளால் மக்களின் பயன் தரு தென்னை மரங்கள் தொடர்ச்சியாக அழித்து வருகின்றன.
நேற்றிரவு புகுந்த காட்டு யானை 13ற்கு மேற்பட்ட தென்னை மரங்களை அழித்துள்ளது. குறித்த கிராமத்தில் ஒரு மாதத்தில் மாத்திரம் 80ற்கு மேற்பட்ட தென்னைகளை அழித்துள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
உரிய அதிகாரிகள் யானை வேலி அமைத்து தர வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



