புதிய போட்டி சாதனையுடன் இலங்கைக்காக தங்கப் பதக்கத்தை வென்ற யோதாசிங்கே…..!
தெற்காசிய மெய்வல்லுனர் சாம்பியன்ஷிப் 2025 இல் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சாமோத் யோதாசிங்க தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
குறித்த ஓட்டப்பந்தய போட்டியை 10.30 வினாடிகளில் முடித்து வெற்றிபெற்றதன் மூலம் புதிய போட்டி சாதனை அவர் படைத்துள்ளார்.
தெற்காசிய மெய்வல்லுனர் சாம்பியன்ஷிப் 2025 இல் 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற சாமோத் யோதாசிங்கே, வேகமான மனிதர் பட்டத்தை வென்றார்.
அவரது அற்புதமான செயல்திறன் இதற்கு முன் இருந்த சாம்பியன்ஷிப் போட்டி சாதனையையும் முறியடித்தது!


