Tuesday, July 29, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeERUKKALAMPIDDYதேசிய போட்டிக்கு தெரிவான பு/எருக்கலம்பிட்டி பாடசாலை!

தேசிய போட்டிக்கு தெரிவான பு/எருக்கலம்பிட்டி பாடசாலை!

பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட சமுக விஞ்ஞான போட்டியில் புத்தளம் எருக்கலம்பிட்டி பாடசாலை வெற்றிபெற்று தேசிய போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

பாடசாலைகளுக்கிடையிலான வடமேல் மாகாண மட்ட சமுக விஞ்ஞான போட்டி அண்மையில் குருநாகலில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

வடமேல் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஏராளமான பாடசாலைகள் குறித்த போட்டியில் பங்குபற்றி இருந்தன.

அந்த வகையில் நடைபெற்று முடிந்த மாகாண மட்ட சமுக விஞ்ஞான போட்டியில், புத்தளம் எருக்கலம்பிட்டி பாடசாலை மாணவர்கள் மூன்று பேர் வெற்றிபெற்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.

தரம் 6 பிரிவில் இடம்பெற்ற போட்டியில் புத்தளம் எருக்கலம்பிட்டி பாடசாலை மாணவன் M.A அப்துல் உமர் முதலாமிடம் பெற்றுக்கொண்டதுடன், தரம் 8 பிரிவில் M.K.M. சயான் முதலாமிடம் பெற்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.

இதேவேளை தரம் 7 பிரிவில் இடம்பெற்ற போட்டியில் புத்தளம் எருக்கலம்பிட்டி பாடசாலை மாணவன் M.I.M. ராஹில் இரண்டாமிடத்தை பெற்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.

அந்த வகையில் குறித்த சமுக விஞ்ஞான போட்டியில் புத்தளம் எருக்கலம்பிட்டி பாடசாலை சார்பாக இரண்டு பேர் முதலாமிடம் பெற்றுருக்கொண்டதுடன், ஒருவர் இரண்டாமிடத்தை பெற்று தேசியமாட்ட போட்டிக்கு தெரிவாகி, பாடசாலைக்கும், பாடசாலை சமூகத்திற்கும் நேர்பெயரை பெற்றுக்கொடுத்துள்ளனர்.

இப்போட்டியில் 4 மாணவர்கள் கலந்துகொண்டு மூன்று மாணவர்கள் தேசியமட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளமை விஷேட அம்சமாகும்.

இம் மாணவர்களின் வெற்றிக்கு பாடசாலையும், பாடசாலை சமூகமும், ஊர் மக்களும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன், தேசிய மட்ட போட்டியிலும் வெற்றிபெற வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற்ற மாணவர்களுக்கு ஈ நியூஸ் பெஸ்ட் ஊடகமும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular